சிறு மற்றும் நுண்துறை நிறுவனங்களின் வளர்ச்சிக்காக 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி முத்ரா திட்டம் இன்று தனது 11ஆம் ஆண்டு நிறைவை கடைப்பிடித்து வருகிறது. இத்திட்டத்தின் மூலம் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலமாக ரூ.10 லட்சம் வரையிலான கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 11 ஆண்டுகளில் இத்திட்டம் மூலம் 40 கோடிக்கும் மேற்பட்ட கடன் கணக்குகள் அனுமதிக்கப்பட்டு, ரூ.23 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது. சிசு, கிஷோர், தருண் என மூன்று பிரிவுகளில் கடன்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டம் குறிப்பாக பெண் தொழில்முனைவோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் உட்பட சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்கும் நன்மை பயந்துள்ளது. வேலை வாய்ப்பு உருவாக்கம் மற்றும் சுயதொழில் வளர்ச்சியில் இத்திட்டம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.